Wednesday, January 13, 2010

எது நடந்ததோ.....!


எந்த சமயத்தில் எதைச் சொல்ல வேண்டும்
என்று ஒரு வரையரை இருக்கிறது. அது மீறிப்
போனால் ரசாபாசம் தான். 'communication
skill' இல் இதை ' a b c' என்று சொல்வார்கள்.
' a b c ' என்றால், 'accuracy, brevity,clarity'
என்று அர்த்தம்.
அனுமன்சொல்லின்செல்வன்.இலங்கை
யிலிருந்து வந்த அனுமன் ராமனைப் பார்த்ததும்
முதலில் சொன்னது ' கண்டேன்' என்றான்.
ராமனின் காதில் தேன் பாய்ந்தது போல்
இருந்தது, அது! பிறகு தான் 'கண்டேன்...
கண்டேன்..கண்டேன் சீதையை ராகவா'
என்றான்.
மெத்தப் படித்தவர்கள் சுருங்கச் சொல்லி,
நிறைய விளங்க வைப்பார்கள்.'accounting'
என்றால் என்ன என்று ஒரு B.Com இடம்
கேட்டுப் பாருங்கள். அவன் ' It is an art of
recording business transactions in a set of
books' என்பான். அதையே MBA விடம்
கேட்டுப் பாருங்கள். ' It is a language of business.'
என்று நெத்தியடியாக பதில் வரும்! இன்றைக்கும்
திருக்குறளின் பாப்புலாரிட்டி என்றால்
அதன் size தான்.
எதையும் சுருங்கச் சொல்ல வேண்டும். அது
அந்த சூழ்நிலைக்குப் பொருத்தமாகவும் இருக்க
வேண்டும்.
அசுவமேத யாகத்தில், பூராப் பணத்தையும்
ஓடாத குதிரையின் மீது கட்டி, பேஸ்து அடித்த
முகத்துடன், இருப்பவரைப் பார்த்து, "எது
நடந்ததோ, அது நன்றாக நடந்தது" என்று
சொல்லிப் பாருங்கள்.
என்ன நடக்கும் என்பதை உங்கள் கற்பனைக்கே
விட்டு விடுகிறேன்.
ஒரு துணுக்குடன் இதை முடித்துக் கொள்கிறேன்.
நண்பர் ஒருவர், அவரைப் பார்க்க வந்த நண்பரிடம்
அவருடைய நகைக்கடையில் நடந்த விஷயம் பற்றிச்
சொன்னார்:
" நம்ம கோபாலனை நம்பி கடையை
விட்டுட்டுப் போனது ரொம்ப தப்பா போச்சுங்க
பத்தாயிரம் ரூபாயை கடைலேர்ந்து எடுத்துட்டு
ஓடிப் போய்ட்டார்ங்க...."
அதுக்கு இவர் சொன்னார்.
" இப்ப நான் கூட சும்மாத் தான் இருக்கேன்.
நா வேணா அந்த வேலையைப்
பார்க்கட்டுமா?"
--------

4 comments:

ரிஷபன் said...

இந்த அப்ரோச் ரொம்ப பிடிச்சிருக்கு.. அந்த வேலை கிடைக்குமா?!

வசந்தமுல்லை said...

communication gap enbathu ithuthan!!!!!!!!!!!!!

Chitra said...

நகைச்சுவை என்ட்டர் பதிவு சிரிக்க, நல்லா communicate பண்ணியிருக்கு.

வை.கோபாலகிருஷ்ணன் said...

எதையும் சுருங்கச் சொல்ல வேண்டும்.
"ARUMAI" (Not ARUVAI)