Friday, July 12, 2013

வாழ நினைத்தால் வாழலாம் !!!



"  இப்ப என்ன பண்றது?"
"அது தான் என் கேள்வியும் !"
"யாராவது ஒருத்தர் வீட்டிலாவது,  பச்சை கொடி காட்டினா
கொஞ்சமாவது சந்தோஷமாக இருக்கும் ..இப்படி ரெண்டு
பேர் வீட்டிலுமா எதிர்ப்பார்ங்க ?"
" உனக்காவது பரவாயில்ல ..என்னை, நீ கம்ப்யூட்டர் கத்துக் கிட்டது
போதும்...பேசாம வீட்டில இருன்னு சொல்லிட்டாங்க "
"கவலை விட்டது "
"என்ன கவலை விட்டது? உனக்கு எப்ப தான் விளையாடறதுன்னு ஒரு
விவஸ்தை இல்லையா?"
"சாரிடா"
"சரி என்ன தான் முடிவு ?"
"இதோ பாரு .நம்மை பெற்றவங்க எல்லாருமே வாழ்ந்து விட்டவங்க ..
இனிமே வாழப் போறவங்க நாம் தான் ...முடிவு எடுக்க வேண்டியவங்க
நாம தான்.."
"என்ன தான் முடிவு ?"
"கோச்சுக்க மாட்டியே ..."
"சொல்லு"
"இதை விட்டா வேற வழியும் எனக்கு தெரியலே"
"பீடிகை போடாம சொல்லு "
"ஒண்ணுமில்ல .. நாம ரெண்டு  பேரும் சொல்லாம, கொள்ளாம சென்னை
கிளம்பறோம் .."
"அச்சச்சோ "
"பயப்படாதே ....நாம நிச்சயம் நல்ல நிலைமைக்கு வருவோம் ..அப்ப நம்ம
இருப்பை அவங்க கிட்ட தெரியப் படுத்துவோம் .நம்ம மேல இருந்த கோபம் அப்ப குறைஞ்சு போயிடும் ..நாம ஒருத்தர் மேல ஒருத்தர் வைச்சிருக்கிற பரஸ்பர
நம்பிக்கையும், அன்பும் நம்ம எல்லாரையும் ஒண்ணு சேர்த்திடும் ...நீ செய்ய வேண்டிய
தெல்லாம் ஒண்ணு தான் ..'
"என்ன?"
"நீ உன் கையில் உள்ளது, கழுத்தில் உள்ள  செயின் எல்லாவற்றையும்
வீட்டில் வைத்து விடு ....பணத்திற்காக நான் உன்னை விரும்பவில்லை என்பது
உன் வீட்டு மனிதர்களுக்கு தெரிய வேண்டும்..'
"சரி.."
" இந்த பரந்த உலகில் நான் படித்த படிப்பிற்கு ஒரு சின்ன வேலை கூட கிடைக்காமலா போய்  விடும்? எனக்கு, உன்னை  கண் கலங்காமல் பார்த்துக் கொள்வேன் நான் ..நீ, எனக்கு   கட்டிய வேட்டியுடன் மட்டும்
வந்தால் போதும் !"
       


Thursday, July 11, 2013

IS IT A CRIME?

களியக்காவிளையில் பஸ் நின்றது.
சிட்டுக் குருவி போல் கலகலவென்று சிரித்துக் கொண்டு
மாணவர் கூட்டம் ஒன்று பஸ்ஸில் ஏறியது.
ஒரே கும்மாளம் தான்.
அவர்களுக்குள் ஒரு சலசலப்பு.
பஸ் டிக்கெட்டை யார் ஸ்பான்சர்  செய்வது என்று !
அதில் ஒரு பையன் துணிந்து சொன்னான்.
'நான் எடுக்கிறேன் ..நாம எத்தனை பேர் என்று சொல்லு? "
அதற்கு ஒருவன் கணக்கெடுக்க ஆரம்பிக்க,
இன்னொரு பையன் சொன்னான்.
"மச்சி எனக்கு டிக்கெட் எடுக்க வேண்டாம்டா...நான்
இங்க, தக்கலைல இறங்கப் போறேன் ..நான் எனக்கு
எடுத்துக்கறேன் "
சொன்ன பையனைப் பார்த்தால் படு சூட்டிகையாக இருந்தான்.
"சரிடா '
அந்த பையனை விட்டு பாக்கி பேருக்கு டிக்கெட் வாங்கினான் ஸ்பான்சர்
செய்தவன்.
அந்த பையன் கடைசி வரை டிக்கெட்டே எடுக்கவில்லை!
தக்கலையும் வந்தது!
என்ன நடந்தது தெரியுமா?
அந்த பையன் கண்டக்டரிடம் சென்றான் ..
"கண்டக்டர் பாக்கி சில்லறை/"
"எவ்ளவ் ?"
 கண்டக்டரோ  படு  டென்ஷனில் !
"அம்பது ரூபா கொடுத்தேன்.. குழித்துறையில் ஏறினேன். ஆறு ரூபாய்
டிக்கெட் காசு போக பாக்கி நாற்பத்தி நாலு ரூபாய்  தரணும் !
கண்டக்டர் நாற்பத்தி நான்கு ரூபாய் எண்ணிக் கொடுத்தார். பாவம் !
  'தில்'லாக டிக்கெட்டில்லாமல் டிராவல் செய்தது போக, டிபனுக்கும்
காசை தேத்திக் கொண்டு இறங்கினான் அந்த பையன்!
   சீட்டு இல்லாமல் பயணம் செய்தால், மோட்டார் வாகன விதிப் படி
ரூ 500 அபராதமோ, அல்லது  மூன்று  மாத சிறை தண்டனையோ அல்லது
இரண்டுமோ விதிக்கப் படும் என்ற நோட்டிஸ் போர்டு பஸ்ஸுக்குள்ளிருந்து சிரித்தது !