Thursday, August 24, 2017

நேத்து ராத்திரி சும்மா!

"நேத்து ராத்திரி சரியா பன்னிரெண்டு மணிக்கு,எங்க பெட்ரூம் கர்ட்டனுக்கு அந்தப்புறம்.."
"அந்தப்புறம்?"
"வெள்ளையா நர்ஸ் மாதிரி ட்ரஸ் போட்டுகிட்டு,ஒரு உருவம்.."
"ம்"
"முதல்ல எம்பொண்டாட்டி தான் அத்தை நோட் பண்ணினா?"
"பண்ணி?"
"பலமா குறட்டை விட்டு தூங்கிகிட்டிருந்த என்னைய எழுப்பினா.."
"எழுப்பி?"
"அந்த வெண்ணிற ஆடை உருவத்தை காமிச்சா?"
"காமிச்சு?"
"காது கிட்ட முணுமுணுன்னு மந்திரம் ஓதினா?"
"ஓதி?"
"அந்த தேவதை காலில் இருக்கிறா மாதிரி கொலுசு வேணும்னா..."
"அச்சச்சோ,நீ என்ன பண்ணே?"
"அதிர்ச்சியில், மயங்கி விழுந்தேன் .."
"ஏன்?"
"நேத்தி ஈவ்னிங்  தான் அவளுக்கு ஆயிரம் ரூபாய்க்கு கொலுசு வாங்கி கொடுத்தேன்..மறுபடியுமாங்கற அதிர்ச்சி தான் !"

6 comments:

KILLERGEE Devakottai said...

நான்கூட பயந்து போய்தான் படிச்சேன்.
- கில்லர்ஜி

வெங்கட் நாகராஜ் said...

எத்தனை வாங்கிக் கொடுத்தாலும் அடுத்தவர் போட்டிருப்பது மாதிரி நிச்சயம் கேட்பாங்க இல்ல! இதுக்கெல்லாம் மயக்கம்போட்டா எப்படி!

:))))

கரந்தை ஜெயக்குமார் said...

ஆகா

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

KILlERGEE சார்,
நானும் பயந்துண்டே தான் எழுதினேன்..

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

கல்யாணம் ஆனதுன்னால பேய்,பிசாசு பயமெல்லாம் இல்லை...அதுக்காக..
அதே மாதிரி கொலுசுன்னவுடனே கொஞ்சம் பயந்துட்டேன,,வெங்கட்,!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

வாங்க கரந்தையாரே!