Monday, August 28, 2017

வருமான வலி!

"....சார் வாங்க..”
“இங்க காம்போதி கனக சபைங்கிறது..”
“கனக சபை நான் தான்.மற்றபடி காம்போதி ராகம் கொஞ்சம் சுமாரா வாசிப்பேன்..அதனால கூப்பிடறாங்களோ ...என்னவோ..”
“ இல்ல சார்..போன மாசம் நாரத கான சபாவில நீங்க காம்போதியை பிச்சு உதறி காயப் போட்டீங்கன்னு கேள்விப் பட்டேன்..”
“அதெல்லாம் சும்மா..யாரோ பொறாமையில சொல்வாங்க..”
”அப்படி இல்ல சார்..தோடி ராஜரத்னம் பிள்ளைக்கு அடுத்தது ராகத்தோட வித்வானைக்கூப்பிடறது உங்களத் தான்னு ஊரே சொல்லுதே..”
“அதெல்லாம் ஒண்ணுமில்ல சார்..எனக்கு புகழ்ச்சி பிடிக்காது..யாராவது என்னை புகழ்ந்தாங்கன்னா..’டேய் சபே, நீ நிஜம்மாலும் அவ்ளவோ பெரிய ஆளான்னு..”தனியா ரூம்ல உட்கார்ந்து அழுவேன்..சார் நான்”
”ஓ!"
"திருச்சி வன்னி மரத்தடி வினாயகர் கோவில்ல கச்சேரிக்குக் கூப்பிட்டாங்க..ரொம்ப ஜோரா  போச்சுல்ல அது..அங்க வாசிச்ச தேனுகா ரொம்ப சூப்பர்... பேசின தொகைக்கு மேல பத்தாயிரம் கூட கொடுத்தாங்க..அவங்க மனசு கஷ்டப் படக் கூடாதுன்னு ரொம்ப கஷ்டப் பட்டு வாங்கினேன் அத..”
“சபால எல்லாம் எவ்ளவ் தருவாங்க..”
“சார்..சும்மா சொல்லக் கூடாது..அறுபதாயிரத்துக்கு குறைஞ்சு எங்கேயும் ஒத்துக்கிறது இல்ல..கல்யாண கச்சேரிக்கு எல்லாம் போறதுல்ல..உங்கள மாதிரி வேண்டப் பட்டவங்க கூப்பிட்டாத் தான் ஒத்துப்பேன்..
அய்யலூர் ஜமீந்தார் பேத்தி கல்யாணத்துல நான் வாசிச்ச பைரவிக்கு ஒரு ரத்ன ஹாரமே சபைல போட்டு கெளரவிச்சார்..”
” அப்ப நான் வரேன்..’
“ என்ன சார் திடீர்னு போறீங்க.. கச்சேரி பேச வல்லியா ஆமா நீங்க யாரு?”
“இன்கம்டாக்ஸ் ஆஃபீஸர்!”
“ சார்..சார்..சும்மா சொன்னேன் சார்...ஒருத்தனும் தேங்கா மூடி கூட கொடுக்கிறதில்ல.. நீங்க ஏதாவது வரி ..கிரி ..போட்டீங்கன்னா, கடன் வாங்கித் தான் சார் கட்டணும்..சார்...சார்...”

2 comments:

நெல்லைத் தமிழன் said...

"என்ன சார் திடீர்னு போறீங்க.. கச்சேரி பேச வல்லியா ஆமா நீங்க யாரு?” - இதை எதிர்பாக்கலை. நல்லா இருந்தது.

G.M Balasubramaniam said...

இதைத்தான் ஆடிக்கறக்கற மாட்டை என்று சொல்வார்களோ